சினிமாவை விட தற்போதெல்லாம் சீரியலுக்கு தான் சென்ஸார் தேவைப்போல. அப்படி ஒரு நிகழ்வு தான் சமீபத்தில் ஒரு சீரியலில் நடந்துள்ளது.
வட இந்திய சீரியல்கள் தான் தற்போது தமிழகத்தில் கூட பிரபலம், இந்நிலையில் சோனி தொலைக்காட்சி பெஹ்ரிதார் பியா கி என்ற சீரியலை ஒளிப்பரப்பி வந்தது.
இந்த சீரியல் இரண்டு ஜமீன் குடும்பத்தை பற்றிய கதை, இதில் ஒரு ஜமீன் இருக்கும் 9 வயது பையன், மற்றொரு ஜமீனில் இருக்கும் 20 வயது பெண்ணை காதலிப்பது போல் வந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் திருமணம் கூட நடந்து குடும்பம் நடத்துவதாகவும் காட்டப்பட, வட இந்திய முழுவதும் இந்த சீரியலை கடும் விமர்சனம் செய்து கிழித்து தொங்கவிட்டனர்.
உடனே தொலைக்காட்சி இந்த சீரியலின் நேரத்தில் இரவு 8.30லிருந்து 10.30க்கு மாற்றியது, அப்போதும் எதிர்ப்பு வர, இந்த சீரியல் ஒளிப்பரப்புவதையே தொலைக்காட்சி நிறுத்திவிட்டதாம்.