ஓட்டுனர் உரிமம் இருந்தால் தான் வாகனம் வாங்க வேண்டும் என்று உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வாகனம் வாங்கும் பலர் ஓட்டுனரை அமர்த்தி கொள்கின்றனர். மேலும் அரசின் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.