உத்திரபிரதேசத்தில் தொடங்கியது தேர்தல் : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்.

உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது. இதன் முதற்கட்ட வாக்கு பதிவானது இன்று தொடங்கப்பட்டது.  இத்தேர்தலில் ஆளும் பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகரில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் இன்று காலையிலேயே வாக்களித்தார்.
இத்தேர்தல் 3 கட்டமாக நடக்க உள்ளது. முதற்கட்டமாக, அயோத்தியா மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட 5 மாநகராட்சிகள், 71 நகராட்சிகள் மற்றும் 154 நகர பஞ்சாயத்துகளுக்கான வாக்கு பதிவு நடைபெருகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 1ந்தேதி வெளியிடப்படும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment