66வயது முதியவருக்கு 81ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

15 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 66 வயது முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, 2.2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. நாளுக்கு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரளாவில், திருவனந்தபுரத்தில் 15 வயது சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் படி அதே பகுதியை சேர்ந்த 66 வயது முதியவர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது இதனையடுத்து 15 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 66 வயது முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, 2.2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment