தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 64,733 பேர் கைது,ரூ.18.29 லட்சம் அபராதம் வசூல் – காவல்துறை

தமிழக முழுவதும் 144 தடையுத்தரவை மீறிய 64,733 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸால் இந்தியாவில் 2000-க்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும்  மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்  பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிலர்  ஊரடங்கு உத்தரவினை  மீறி வாகனங்களில் சுற்றி திரிந்ததையும் அவர்களுக்கு காவல்துறையினர்  நூதன தண்டனைகளும் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் தமிழகத்தில்  144  தடை உத்தரவை மீறியதற்காக  64,733  பேர் கைது செய்யப்பட்டு, 48,945 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக காவல்த்துறை தெரிவித்துள்ளது . ரூ.18.29 லட்சம் அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.