வட இந்தியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு!

வட இந்தியாவின் பஞ்சாப், டெல்லி மற்றும் அண்டை நாடாகிய ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இன்று இரவு 10.31 மணியளவில் டெல்லி, பஞ்சாப் மற்றும் இந்தியாவின் அண்டை நாடாகிய ஆப்கனிஸ்தானின் தஜிகிஸ்தான் ஆகிய பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.3 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகிய நிலநடுக்கம் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாம்.

பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், டெல்லி, நொய்டா போன்ற பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வீடுகளில் உள்ள பொருட்கள் மற்றும் மின்விசிறிகள் ஆட்டம் கண்டதை கண்கூடாக பார்க்க முடிந்ததாகவும் மக்கள் கூறியுள்ளனர். அதிகளவில் சேதங்கள் ஏதும் இல்லாவிட்டாலும், மக்கள் அச்சத்தால் இரவு முழுவதும் தூக்கமின்றி வெளியிலேயே நின்றுகொண்டு இருந்துள்ளனராம்.

author avatar
Rebekal