லாரி டிரைவரிடம் 50 லட்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம்!

லாரி ஓட்டுனரிடம் 50 லட்சம் ரூபாய் மிரட்டி வாங்கிய நெல்லை காவலர் பணியிடை நீக்கம்.

கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியன்று ராணி அண்ணா கல்லூரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தவர் தான் நெல்லை மாநகர ஆயுதப்படை போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர் செல்வகுமார்.

அப்போது அந்த வழியே நெல் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி டிரைவரான சபாபதியிடம் 50 லட்சம் ரூபாயை காவலர் செல்வகுமார் மிரட்டி பெற்றதாக அண்மையில் வீடியோ வெளியாகியது.

இந்த வீடியோ தொடர்பான முதற்கட்ட விசாரணையில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் தீபக் தாமோதர், 50 லட்சம் லஞ்சம் பெற்ற காவலர் செல்வகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Rebekal