50 நாள்.. 500 கோடி… தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த பொன்னியின் செல்வன்.!

இயக்குனர் மணிரத்னம் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக திரைப்படமாக இயக்கி இருந்தார். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

Ponniyin Selvan
Ponniyin Selvan Image Source Twitter

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. பிறகு படம் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி ஓடிடியில் வெளியானது. ஓடிடியில் வெளியான பிறகும் கூட இன்னும் படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது.

Ponniyin Selvan ON Amazon Prime
Ponniyin Selvan ON Amazon Prime Image Source Twitter

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படம் வெளியாகி இன்றுடன் 50-நாட்கள் ஆகிறது. எனவே படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி சாதாரண வெற்றிய இல்லை தமிழ் சினிமாவையே தலைநிமிர வைத்த வெற்றி என்று சொல்லாம்.

இதையும் படியுங்களேன்- படத்தில் காட்ட முடியவில்லை… அதனால் இன்ஸ்டாவில் காட்டுகிறேன்.! ஒப்பனாக பேசிய பூனம் பாஜ்வா.!

PonniyinSelvan2
PonniyinSelvan2 Image Source Twitter

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அந்த படம் எத்தனை கோடிகள் வசூலை குவிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment