துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை- 4 பேர் பிடிபட்டனர்..!

அரக்கோணம் அருகே தீரன் பட பாணியில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் பிடிபட்டனர்.

அரக்கோணம் அருகே கன்னிகாபுரத்தில் கடந்த 17ம் தேதி இரவு ஆடிட்டர் புஷ்கரன் வீட்டுக்குள் நுழைந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை அடித்தனர். துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் 25 சவரன் நகையும், 40,000 பணத்தை  கொள்ளையடித்து சென்றனர்.துப்பாக்கிச் சூட்டில் ஆடிட்டர் புஷ்கரன் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்கள் மருத்துமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த கொள்ளைச் சம்பவத்தை தொடர்ந்து 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் விசாரணை நடத்திய நிலையில், திருவாலங்காடு அருகே வியாசபுரத்தை  சார்ந்த இளைஞர்கள் 4 பேர் போலீசாரிடம் சிக்கினர். பிடிபட்ட 4 பேரிடம் இருந்து துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

author avatar
murugan