Categories: இந்தியா

4 முதலமைச்சர்களுக்கு தர்ணா போராட்டம் நடத்தும் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதி மறுப்பு!

டெல்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றுகூறி, முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த 7 நாட்களாக தனது அமைச்சர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்த அவர்கள், ஆந்திர பவனில் நேற்று மாலை சந்தித்து முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.

பின்னர், டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு அவர்கள் அனுப்பிய கடிதத்தில், கெஜ்ரிவால் விவகாரம் தொடர்பாக அவரிடம் பேச விரும்புவதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால் அவர்களை சந்திக்க துணைநிலை ஆளுநர் மறுத்துவிட்டார்.

அதேபோன்று, கெஜ்ரிவாலை சந்திக்க 4 மாநில முதலமைச்சர்களுக்கு போலீசாரும் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற நால்வரும், அவரது மனைவியிடம் நிலைமையைக் கேட்டறிந்தனர்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய மம்தாபானர்ஜி, குமாரசாமி, பினராயி விஜயன், சந்திரபாபு நாயுடு ஆகியோர், டெல்லி விவகாரத்தில் பிரதமர் மோடி நேரில் தலையிட வேண்டும் என வலியுறுத்தினர்.

நிதி ஆயோக் கூட்டத்தின்போது பிரதமரிடம் நேரில் முறையிட இருப்பதாகவும் அவர்கள் கூறினர். அரசியல் அமைப்பு சட்டத்தை மோடி அரசு மதிக்கவில்லை எனவும், கூட்டாட்சி முறையைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முயற்சிப்பதாகவும் 4 மாநில முதலமைச்சர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…

24 mins ago

கேரளாவில் அதிர்ச்சி.. பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி தூக்கி வீசிய கொடூரம்.!

Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…

35 mins ago

சிங்கம் பட பாணியில் பிரஜ்வலை பிடிக்க வெளிநாடு செல்லும் சிறப்பு புலனாய்வு குழு.!

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…

40 mins ago

‘தேங்க்ஸ் தாத்தா ஃபார் தி சப்போர்ட்’ !! 103 வயதான சிஎஸ்கே ரசிகருக்கு தோனியின் அன்பு பரிசு !

CSK old Fan  : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை  கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…

2 hours ago

கமல்ஹாசன் ஏமாற்றிவிட்டார்! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த திருப்பதி பிரதர்ஸ்!

Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…

2 hours ago

வந்துட்டான்யா.. தமிழ்நாட்டில் நாளை முதல் கத்தரி வெயில் தொடக்கம்! ஒரு மாதம் கொளுத்தும்…

Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…

2 hours ago