3 எம்.எல்.ஏக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்!

அதிமுகவை சேர்ந்த கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி  சபாநாயகரிடம் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து சபாநாயகர் நடவடிக்கை எடுப்பதற்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எம்எல்ஏ இரத்தினசபாபதி,கலைசெல்வன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

கள்ளக்குறிச்சி எம் ல் ஏ பிரபு வழக்கு தொடராமல் சபாநாயகருக்கு பதில் அளிக்க தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையில் வந்தபோது, நீதிமன்றம் , சபாநாயகர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உள்ளது. அதனை அடுத்து கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பிரபுவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இதனை விசாரித்த நீதிபதிகள் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்துள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment