குழந்தை விற்பனை விவகாரம் : சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல்

நாமக்கல் ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.பின்  நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் விவரங்கள் குறித்த அறிக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளது.

Leave a Comment