சென்னையில் ஒரே நாளில் 324 நபர்களுக்கு தொற்று.!

சென்னையில்  இன்று 324 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு மொத்த  பாதிப்பு எண்ணிக்கை 2328 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில்  771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 4829 ஆக அதிகரித்துள்ளது. இன்று 31 பேர் குணமடைந்ததால் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1516 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆகவும் உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு மொத்த  பாதிப்பு எண்ணிக்கை 2328 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது.

இந்த மூன்று நாட்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் தொடர்பு உடையவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Dinasuvadu desk