இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி புதிய அறிவிப்பு வெளியிட்டார்.அதில், “தமிழகத்தில் புதிய மூன்று அரசு சட்டக்கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும். இதற்காக 9 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மொத்தம் தமிழகத்தில் 13 அரசு சட்ட கல்லூரிகள் உள்ளது.ஒரு தனியார் சட்ட கல்லூரியும் உள்ளது.இந்த நிலையில் முதலமைச்சர் தற்போது மேலும் மூன்று அரசு சட்டக்கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.