2-வது டெஸ்ட்- தென்னாபிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

தென்னாபிரிக்கா 67.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 243 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில்நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி 79.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 229 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 7, முகமது ஷமி 2 , பும்ரா 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 266 ரன்கள் எடுத்தனர். இதனால், தென்னாபிரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று மீதம் இருந்த நேரத்தில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி நேற்றைய ஆட்ட முடிவில் 2 விக்கெட்டை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், தென்னாபிரிக்கா வெற்றி பெற 122 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில்  நான்காம் நாள் ஆட்டம் தொடங்கு இருந்தது. அப்போது மழை பெய்ததால் போட்டி தொடங்க தாமதம் ஏற்பட்டது. பின்னர், களமிறங்கிய தென்னாபிரிக்கா நிதானமாக விளையாடி 67.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 243 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் இந்தியா 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி வரும் 11-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

author avatar
murugan