RRvsDC : டெல்லி அணிக்கு 2-வது தோல்வி ..!! 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி ..!

RRvsDC : ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக ராஜஸ்தான், டெல்லி அணி இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் பேட்டிங் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள்  அடுத்தடுத்து சொர்ப்ப ரங்களில் ஆட்டமிழந்து,  36-3 என்ற இக்கட்டான நிலையில் தத்தளித்தது. இதனால், அடுத்து களமிறங்கிய அஸ்வினும், ரியான் பராகும் நிதானத்துடன் விளையாடி அணியின் ஸ்கோரை படி படியாக உயர்த்தினார்கள்.

இவர்களது அபார கூட்டு விளையாட்டால் அந்த அணி இக்கட்டான நிலையில் இருந்து தப்பித்தது. பொறுமையாக விளையாடி கொண்டிருந்த அஸ்வின் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேலும், 15 ஓவர்களுக்கு மேல் பொறுமையாக விளையாடிய ரியன் பராக் அதிரடி காட்ட தொடங்கினார், அவர் 44 பந்துகளில் 83* ரன்கள் எடுத்திருந்தார். அவரது அதிரடியில் 20 ஓவருக்கு ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

அதனை தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. டெல்லி அணியின் தொட வீரரான மிட்செல் மார்ஷ் ஆட்டம் தொடங்கிய முதலே அதிரடி காட்டினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பர்கர் பந்தில் போல்ட்டாகி 23 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய ரிக்கி ரன்ஸ் எடுத்துவும் எடுக்காமல் ஆட்டமிழந்து பர்கர் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் டெல்லி அணியின் கேப்டனான பண்ட்டும், டேவிட் வார்னரும் பொறுமையாக நின்று ரன்களை சேர்க்க தொடங்கினர்.

இருவரின் பொறுமையான ஆட்டத்தில் டெல்லி அணி ரன்களை சேர்க்க தொடங்கியது. ஆனால், டேவிட் வார்னர் எதிர்பாராத விதமாக சந்தீப் ஷர்மாவின் பந்தில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அணியின் கேப்டன் பண்ட்டும் 28 ரன்களில் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழக்க 13.1 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், போட்டியின் வெற்றி ராஜஸ்தான் பக்கம் சாய தொடங்கியது.

டெல்லி அணியில் இறுதி கட்டத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்ஸும், அக்சர் பட்டேலும் களத்தில் அவ்வப்போது சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தனர். விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில், இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஸ்டப்ஸ் அவேஷ் கானை எதிர்கொண்டார். சிறப்பாக பந்து வீசிய ஆவேஷ் கான் முதல் நான்கு பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி வெற்றியை உறுதி செய்தது.

இறுதியில் 20 ஓவருக்கு, 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 49 ரன்கள் எடுத்தார் . இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரின் 2-வது அபார வெற்றியை பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.