#IPL2022: வெற்றியை தொடருமா சென்னை? கடும் எதிர்பார்ப்புகளில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29-வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், வாரஇறுதி நாட்களில் இரண்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இன்று நடைபெறவுள்ள இரண்டாம் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி, 5 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் 9-ம் இடத்தில் உள்ளது. அதேபோல குஜராத் அணி, 5 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூர் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றிபெற்ற நிலையில், வெற்றிகளை தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எதிர்பார்க்கப்படும் XI:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), சிவம் துபே, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டான், தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி ஆகிய வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் டைட்டன்ஸ்:

ஷுப்மன் கில், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன் ), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, யாஷ் தயாள் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.