#Breaking:மக்களே உஷார்…கடந்த ஒரே நாளில் மேலும் 2,710 பேருக்கு கொரோனா;14 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 2,628 ஆக இருந்த நிலையில் மீண்டும் உயர்ந்து,கடந்த ஒரே நாளில் 2,710 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,47,530 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 18 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆக குறைந்துள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,539 ஆக பதிவாகியுள்ளது. அதைப்போல,கடந்த ஒரே நாளில் 2,296 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,26,07,177 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 15,814 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டில் இதுவரை 1,92,97,74,973 கோடி பேருக்கு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 14,41,072 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment