வங்கி வேலை… 1 லட்ச ரூபாய் மோசடி… ஏமாற்றப்பட்ட 22 வயது இளம் பெண்…

புனேவில், வங்கி வேலை வாங்கி தருவதாக கூறி 22 வயது இளம் பெண்ணை ஒரு கும்பல் ஏமாற்றி 1 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளது. 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் அண்மையில் ஒரு ஆன்லைன் மோசடியில் ஒரு இளம் பெண் சிக்கியுள்ளார். அவரிடம் ஒரு மர்ம கும்பல் இணைய வாயிலாக ஏமாற்றியுள்ளது.

அதாவது, அந்த கும்பம் இளம் பெண்ணிடம் , உங்களுக்கு வங்கி வேலை வாங்கி தருகிறோம் என கூறி, அதற்காக சில ஆவணங்களும், மேலும் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தையும் கரைந்துள்ளனர்.

பதிவு கட்டணம், டெபாசிட் கட்டணம், மடிக்கணினி கட்டணம், ஜிஎஸ்டி மேலும் கமிஷன் கட்டணம் என மொத்தமாக 1 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

பணத்தை வாங்கிக்கொண்ட அந்த கும்பல், அடுத்து எதுவும் தொடர்பில்லாமல் இருந்த பிறகு தான் தான் ஏமாற்றப்பட்டது அந்த பெண்ணிற்கு தெரிந்துள்ளது. பிறகு போலீசில் புகார் அளித்துள்ளார் அந்த பெண். தற்போது அந்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட அந்த கும்பலை போலீஸ் தேடி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment