செய்தியாளர் உட்பட 20 பேர்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நிகழ்த்தப்பட்ட இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டனர்; 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காபூலில் உள்ள Shashdarak என்ற இடத்தில், இத்தாக்குதல் நடந்துள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர். அடுத்தடுத்து இரண்டு முறை குண்டுகள் வெடித்ததாகவும், அருகில் இருந்த கட்டடங்களும் சேதமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்களில், செய்தியாளர்களும் அடங்குவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த அமைப்பும் இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்கவில்லை. கடந்த வாரம் காபூலில் நடந்த தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. … Read more