தமிழகத்தில் இன்று மட்டும் 2 பேர் பலி..மேலும் 38 பேருக்கு கொரோனா – விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1,204 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,242 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 47 வயது ஆண் மற்றும் தனியார் மருத்துவமனையில் 59 வயது ஆண் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 118 பேர் குணமடைந்துள்ளார்கள் என்றும் தமிழகத்தில் இதுவரை 21,994 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் 1,242 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 17, 835 என கூறியுள்ளார். இன்று மட்டும் 2,739 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்