ஒரு கட்சிக்கு 2 தலைமை!வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லாது-ஜவாஹிருல்லா

ஒரு கட்சிக்கு 2 தலைமை இருப்பது அந்த கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லாது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்
அண்மையில் அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஒரு கட்சிக்கு 2 தலைமை இருப்பது அந்த கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லாது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என்று தெரிவித்துள்ளார்.