பணியிலிருக்கையில் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 2 லட்சம் நிதி!

கொரோனா தோற்று பணியிலுக்கும் பாதுகாப்பு படையினருக்கு ஏற்பட்டால் அவர்களுக்கு 2 லட்சம் நிதியாக அளிக்கப்படும் என டிஜிபி திரிபாதி  தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 50 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் அதிகம் பாதிக்கப்படுவது மருத்துவர்களும், பாதுகாப்பது பணியில் உள்ளவர்களும் தான். 

சென்னை மாநகர காவல் துறையில் கூடுதல் கமிஷனர், 2 துணை கமிஷனர்கள், 4 உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் என நேற்று வரை மொத்தம் 224 பேரும் மற்றும் தமிழகம் முழுவதும் 320க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பணியிலிருக்கையில் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு தலா 2 லட்சம் நிதியாக அளிக்கப்படும் என டிஜிபி திரிபாதி  அவர்கள் அறிவித்துள்ளார். 

author avatar
Rebekal