தங்கள் நண்பரை டெல்லியில் கடத்தி உ.பி-யில் எரித்து கொன்ற கொலைகார நண்பர்கள்.!

டெல்லியில் ஜெய்குமார் என்பவரை அவரது நண்பர்கள் இருவர் கடத்தி சென்று கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

டெல்லியை சேர்ந்த ஜெய்குமார் எனும் 45வயது மதிக்கத்தக்க நபர் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி தனது நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார் . ஆனால்,எ அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் ஜெய்குமார் மனைவி போலீசில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் தீவிரமாக தேடினர். அப்போது ஜெய்குமார் பார்ப்பதாக கூறிய அவரது நண்பர்களை போலீசார் விசாரித்தனர்.

அதன்பின்னர் தான் அவர்கள் கடத்தியது தெரியவந்துள்ளது . ராஜ்குமார் மற்றும் தீபக் ஆகிய இருவரும் ஜெய்குமாரை பழைய பகைக்காக கடத்தி உத்திரபிரதேசம் பராட் எனும் ஊரில் ஜெய்குமாரை கொண்டு சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து எரித்து பின்னர் புதைத்த திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து கோலியாளிகளான  ராஜ்குமார் மற்றும் தீபக் ஆகிய இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment