மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்.! லெஜண்ட் சரவணன் அதிரடி.! 

மக்களும், மகேசனும் மனசு வைத்தால் அரசியலுக்கு வருவேன் என லெஜண்ட் சரவணன் கூறினார். 

திரைத்துறையில் அதிரடியாய் பிரமாண்டமாய் அறிமுகமாகி,  முதல் படத்திலேயே நல்ல வசூலை பெற்ற  ஹீரோ தான் லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி. இவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் பிரமாண்ட பட்ஜெட் என்றாலும், அந்த தொகையை படம் வசூல் செய்யவில்லை. ஆனால், ஒரு அறிமுக ஹீரோ படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து நல்ல வசூல் கிடைத்தது.

அதே போல, அடுத்த படமும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அவர் அண்மையில் அளித்த பேட்டியில், அரசியல் பிரவேசம் குறித்தும் பேசினார்.

அரைசியலுக்கு வருவீர்களா என கேட்டதற்கு அண்ணாச்சி சரவணன் கூறுகையில், அது தெரியவில்லை. மக்களும் மகேசனும் (இறைவன்) மனசு வைத்தால் வருவேன். மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன், என சிரித்துக்கொண்டே பதில் கூறினார் அண்ணாச்சி சரவணன்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment