19,410 ரன்.. 57 சதம்.. மற்றும் 91 அரைசதம்.. விளாசிய வாசிம் ஜாபர் தனது ஓய்வை அறிவித்தார் ..!

இந்திய வீரர் வாசிம் ஜாபர் இன்று  சர்வதேச போட்டிகளில் தன்  ஓய்வை அறிவித்துள்ளார்.கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வரும் ஜாபர் மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்காக விளையாடி உள்ளார். அதிக ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடிய வீரரும் , ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை குவித்தும் வீரரும்  என்ற சாதனை படைத்துள்ளார் .

இவர் இந்திய அணிக்காக கடந்த 1996 முதல் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1,944 ரன்களை குவித்துள்ளார். மேலும் 2  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் 212 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் முதல் தர போட்டியில் இவர் 19,410 ரன்களும் ,  57 சதம் மற்றும் 91 அரைசதம் அடித்துள்ளார்.

author avatar
murugan