வாழ்க்கை சம்பவங்களை கூறிய பெண் – கண்கலங்கிய பிரதமர் மோடி.!

மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம், குறைந்த விலையில் வேதிப்பெயரிலான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும், 700 மாவட்டங்களில் 6,200 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மக்கள் மருந்தக வாரம் கூட்டம் மார்ச் 1 முதல் இன்று வரை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், திட்டத்தின் பயனாளிகளுடன் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது தீபா ஷா என்ற பெண், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை கண்ணீர் மல்க கூறும்போது, பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்