உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழ்நாடு மாணவர்கள் 181 பேர் சென்னை விமான நிலையம் வருகை..! அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு..!

உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 11 நாட்களாக  தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. மேலும், சில நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்கும் மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், இதுவரை உக்ரைனில் இருந்து 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். இந்த நிலையில், உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழ்நாடு மாணவர்கள் 181 பேர் சென்னை விமான நிலையம் வருகை புரிந்துள்ளனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்ற நிலையில், மாணவர்களை அவர்களது பெற்றோர் கண்ணீருடன் வரவேற்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.