தமிழகத்தில் விரைவில் 1500 புதிய பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் விரைவில் 1500 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழகத்தில் விரைவில் 1500 புதிய பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னையில் மின்சார பேருந்துகளுக்கான வழித்தடங்கள், சார்ஜிங் பாய்ண்ட் குறித்த விரிவான திட்ட அறிக்கை அரசிடம் தரப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிக்க உள்ளார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்தெரிவித்துள்ளார்.