சென்னை : ஒரே குடும்பத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு !

சென்னையில் ஒரே குடும்பத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு மக்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  கொரோனா பாதிப்பால் 1885 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1020 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமதமித்தில் அதிக பாதிப்பு உள்ள சென்னையில் நேற்று(ஏப்.26) 28 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 523 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் 15 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அறிவித்துள்ளனர்.

author avatar
Vidhusan