அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் ! 18 மாதம் சிறை விதித்த நீதிமன்றம்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு 18 மாதம் சிறை விதித்துள்ளது  நீதிமன்றம்.

கடந்த 2018 -ஆம் ஆண்டு யூடியூப் மூலமாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.இவர் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த
மைக்கேல் கெட்லு ஆவார்.இவர் வெளியிட்ட வீடியோவில், நான் அமெரிக்க அதிபர் ட்ரம்பை கொலை செய்வதற்கு முன்பு அவர் டெக்சாஸ் மாகாணத்துக்கு வருவார் என்று எதிர்பார்த்து இருக்கிறேன் என்று பேசியிருந்தார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதன் பின்னர் போலீசார் மைக்கேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதில் மைக்கேல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதனால் நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.அதில் மைக்கேலுக்கு  18 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.