2 முறை வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமை – அமைச்சர் ஜெயக்குமார்.!

கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சென்னை ராயபுரம் மண்டலத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதியும்
சேப்பாக்கம் தொகுதியின் 2 வார்டுகளும், எழும்பூர் தொகுதியின் 2 வார்டுகளும் ராயபுரம் மண்டலத்தில் அடங்கும்.

ராயபுரம் தொகுதியில் 1, 715 பேருக்கும், துறைமுகம் தொகுதியில் 1,456 பேருக்கும் ,சேப்பாக்கத்தின் 2 வார்டுகளில் 406 பேருக்கும், எழும்பூரின் 2 வார்டுகளில் 630 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் 2 முறை தடுப்பை தாண்டி வெளியே சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 5 நாள் சீரக குடிநீரை மக்கள் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.  ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள்தூள், உப்பு தலா ஒரு சிட்டிகை சேர்த்து காய்ச்சி பருகலாம் எனவும் தெரிவித்தார்.

சென்னை ராயபுரம் மண்டலத்தில் இதுவரை  4,405 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan