இறைச்சி வாங்க சென்ற 13 வயது சிறுமி! பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது.

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் கேள்வி குறியாக தான் உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எந்த வயது பெண்களுமே ஒரு இடத்திற்கு தனியாக செல்லா இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, இறைச்சி கடைக்கு கறி வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய சமீம் என்ற இளைஞர் அப்பெண்ணுக்கு பாலையால் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமி நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பெயரில், பீகார் மாநிலத்தை சேர்ந்த  அந்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.