தஞ்சை : கொரோனா சிகிச்சை பெற்று வந்த 10 பேர் வீடு திரும்பினார்கள் !

தஞ்சையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் வீடு திரும்பினார்கள்.

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 24506 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 775 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் என ஐந்து மாவட்டங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

author avatar
Vidhusan