ஊஞ்சல் கம்பியில் சிக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு …!

பெங்களூருவில் மாகடி சாலையில் உள்ள 11 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் உள்ள ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று சிறுமி ஊஞ்சல் கம்பிகளில் சிக்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனை கண்டதும் ஓடி சென்ற சிறுமியின் பெற்றோர்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் சிறுமி முன்னதாகவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Rebekal