1,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் – அமைச்சர் வேலுமணி…!!

சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தேர்தல் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஒட்டப்பிடாரம் தேர்தல் பொறுப்பாளர்களான, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, ராஜலெட்சுமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, மின் விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை, மக்களுக்கு உடனுக்குடன் நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment