தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி ! சரிவில் இருந்த மீட்ட ரோகித், ரகானே

ரோகித் மற்றும் ரகானே சிறப்பாக விளையாடி வருகின்றனர். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை.கில்,கேப்டன் கோலி டக் -அவுட், புஜாரா 21 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.இந்திய அணி 86 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வந்தது.ஆனால் மறுபுறம் ரோகித் சிறப்பாக விளையாடி வந்தார்.

தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த நிலையில் ரோகித் மற்றும் ரகானே ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர்.சிறப்பாக விளையாடிய ரோகித் சதம் அடித்தார்.தற்போது ரோகித் மற்றும் ரகானே ஜோடி 100 ரன்களை அடித்துள்ளது.56 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து,189 ரன்கள் அடித்துள்ளது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லீச் ,அலி ,ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.ரோகித் சர்மா 132 ரன்களுடனும் ,ரகானே 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.