ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!29 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணி உட்கொண்ட 10 வயது சிறுமி இறந்துள்ளார், மேலும் 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரணி பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள 7 நட்சத்திர ஹோட்டலில் உணவு உட்கொண்டவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது.

ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த ஹோட்டலில் உள்ள பிரியாணி மற்றும் கோழியை சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில மணி நேரங்களில் ஆனந்த், அவரது மனைவி பிரியதர்ஷினி, மகன் சரண் மற்றும் மகள் லோஷினி ஆகியோர் உணவில் உள்ள விஷத்தின் காரணத்தால் அதன் அறிகுறிகளை உணர ஆரம்பித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து உடனடியாக குடும்பத்தினர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், 10 வயது லோஷினி உணவு விஷத்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து ஆனந்த், பிரியதர்ஷினி மற்றும் சரண் ஆகியோர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேலும், அதே ஹோட்டலில் உணவு உட்கொண்ட மற்ற 26 பேர் மயக்கம் அடைந்து உள்ளூர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆரணியின் வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர், தற்போது சிகிச்சை பெற்று வரும் மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தெரிவித்துள்ள கூற்றின் அடிப்படையில், உணவு உட்கொண்ட ஹோட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஹோட்டல் உரிமையாளர் அம்ஜத் பாஷா மற்றும் அதன் சமையல்காரர் முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recent Posts

நெல்லை காங். தலைவரை 2 நாட்களாக காணவில்லை – மகன் காவல்நிலையத்தில் புகார்

KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…

3 mins ago

இந்திய பகுதிகளுடன் நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு.! வெடித்த புதிய சர்ச்சை…

Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…

27 mins ago

‘எதுவுமே உருப்படியா அமையல’ ! தோல்விக்கு பின் புலம்பும் ஹர்திக் பாண்டியா !!

Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…

28 mins ago

முதல் பெண் மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை கெளரவித்த கூகுள் டூடுல்.!

Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…

35 mins ago

ஏ.ஆர்.ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” – இழப்பீடு வழங்க உத்தரவு!

A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…

38 mins ago

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா குஜராத் ? பெங்களுரூவுடன் இன்று பலபரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…

2 hours ago