Categories: சினிமா

ஏ.ஆர்.ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” – இழப்பீடு வழங்க உத்தரவு!

A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர் ஆணையம் உத்தரவு.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசைக்கச்சேரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, பல மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பல மக்கள் இசை நிகழ்ச்சியை பார்க்க நேரில் வருகை தர முன் பதிவு செய்து டிக்கெட்கள் எடுத்தனர். ஆனால், அன்றய தினம் கனமழை பெய்து வந்த காரணத்தால் அன்று இசை நிகழ்ச்சி நடைபெறவில்லை.

அடுத்ததாக, நவம்பர் 8 ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூரில் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால், இந்த இசை நிகழ்ச்சியே பெரிய சர்ச்சையாக மாறியது என்றே சொல்லலாம். குறிப்பாக டிக்கெட்டுக்கு ஏற்றபடி இருக்கைகள் போடவில்லை. எனவே, டிக்கெட் போட்டவர்கள் பலருக்குமே இருக்கைகள் கிடைக்கவில்லை. இதனால் நிகழ்ச்சியை பார்க்காமல் பலரும் வீடு திரும்பினார்கள்.

இதன் காரணமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யாத ஏ சி டி சி நிறுவனதின் மீது பெரிய அளவில் விமர்சனங்களும் வைக்கப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சியே பெரிய சர்ச்சையாகவும் மாறியது. இதன் பிறகு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியை பார்த்தபார்க்காக வந்துவிட்டு பார்க்காமல் சென்ற 4000 பேருக்கு டிக்கெட் பணத்தை திரும்ப வழங்கினார்.

இருப்பினும், கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அஸ்வின் மணிகண்டன் என்பவர் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரியை நடத்திய ஏ சி டி சி நிறுவனம் மீது புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் குடும்பத்துடன் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றும் தங்களால் நிகழ்ச்சியை காண முடியவில்லை டிக்கெட் தொகை ரூபாய் ரூ.12,000, இழப்பீடு ரூ.50,000, மற்றும் வந்து சென்ற செலவுக் தொகை ரூ.5,000 என மொத்தமாக ரூ.67,000 வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணை செய்த குறைதீர் ஆணையம், டிக்கெட் தொகையுடன் சேர்த்து மொத்தமாக அஸ்வின் மணிகண்டனுக்கு ரூ 67,000 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Recent Posts

மீண்டும் ரூ.55,000- ஐ நெருங்கும் தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்வு.!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…

7 mins ago

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…

41 mins ago

திருமணத்திற்காக ஷாப்பிங் சென்ற போது பயங்கர விபத்து.. 6 வயது சிறுவன் உள்பட 5 பலி.!

சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…

50 mins ago

ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!

சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி  ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…

58 mins ago

கெஜ்ரிவால் வீட்டில் நடந்தது என்ன.? ஆம் ஆத்மி விளக்கமும்.. ஸ்வாதி மாலிவால் பதிலும்…

சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…

1 hour ago

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.!

சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…

2 hours ago