வீரேந்தர் சேவாக் வெளியிட்ட வீடியோ..! என்ன அது…!

வீரு என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக் (Virender Sehwag )  இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்.வலது கை கிரிக்கெட் வீரர்  இவர் அனைத்துக் காலத்திற்குமான அபாயகரமான கிரிக்கெட் வீரர் ஒருவராக அறியப்படுகிறார். அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளராகவும் செயல்பட்டார். 1999 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டு கிரிக்கெட் வீரர் , 2001 ஆம் ஆண்டில் தேர்வுத் கிரிக்கெட்  போட்டியிலும் அறிமுகமானார்.2008 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக 2009 ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுள் ஒருவராக இவரை விசுடன் கிரிக்கெட் வீரர் நாட்குறிப்பு அறிவித்தது. அந்த ஆண்டில் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் இவர் ஆவார்.

Image result for வீரேந்தர் சேவாக்இவர் பல சாதனைகளைப் படைத்தார். குறிப்பாக சேப்பாக்கம் கிரிக்கெட்  அரங்கத்தில் தென்னாபிரிக்கத் கிரிக்கெட்  அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் கிரிக்கெட்  போட்டியில் 319 ஓட்டங்கள் எடுத்தார். இவர் 278 பந்துகளில் 300 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக மூன்று நூறுகள் அடித்து சாதனை படைத்தார். மேலும் டிசம்பர் 3, 2009 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 207 பந்துகளில் 250 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக 250 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் கிரிக்கெட்  போட்டிகளில் ஒருமுறைக்கும் அதிகமாக மூன்றுநூறுகள் அடித்த நான்கு வீரர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். மேலும் மூன்றுநூறுகள் மற்றும் ஐந்து இலக்குகளை ஒரே ஆட்டப் பகுதியில் எடுத்த ஒரே வீரர் இவர் ஆவார்.60 பந்துகளில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் விரைவாக நூறு ஓட்டங்கள் அடித்த இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். டிசம்பர் 8, 2011 ஆம் ஆண்டில்மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இருநூறு ஓட்டங்கள் அடித்தார். Image result for வீரேந்தர் சேவாக்சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்தச் சாதனையைப் புரிந்த இரண்டாவது வீரரானார். இந்தப் போட்டியில் 149 பந்துகளில் 219 ஓட்டங்கள் எடுத்தார். இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். ஆனால் இந்தச் சாதனையை நவம்பர் 13, 2014 இல் ரோகித் சர்மா 173 பதுகளில் 264 ஓட்டங்கள் எடுத்து முறியடித்தார்.ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் இருநூறு ஓட்டங்களும் , தேர்வுத் துடுப்பாட்டங்களில் மூன்று நூறுகளும் அடித்த இருநபர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். மற்றொருவர் கிறிஸ் கெயில் ஆவார்.

இவர் தனது பக்கத்தில் குரங்கு ஒன்று , 2 புலிகளுக்கு விளையாட்டு கட்டுவது போலவும் , விளையாடுவது போலவும் போட்டுள்ளார். அதன் காட்சி இதோ…

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment