Categories: இந்தியா

ரூ 13,000,00,00,000….மோசடி மன்னன் நிரவ் மோடி….தலைமறைவு குற்றவாளி என அறிவிப்பு…குஜராத் கோர்ட்டு அதிரடி..!!

ரூ.52 கோடி சுங்க வரி ஏய்ப்பு வழக்கில், வைர வியாபாரி நிரவ் மோடியை தலைமறைவு குற்றவாளி என குஜராத் கோர்ட்டு அறிவித்தது.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். 2014-ம் ஆண்டு அவர் ரூ.52 கோடி அளவுக்கு சுங்க வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சுங்க வரி துணை ஆணையர் ஆர்.கே.திவாரி தொடர்ந்த வழக்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இந்த வழக்கில், நிரவ் மோடி ஆஜராகாததால், அவருக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகும் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, அவரை தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்குமாறு கோர்ட்டை சுங்க இலாகா அணுகியது. இந்த மனு, மாஜிஸ்திரேட்டு பி.எச்.கபாடியா முன்பு  இன்று விசாரணைக்கு வந்தது. நிரவ் மோடியை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 82-வது பிரிவின்கீழ், ‘தலைமறைவு குற்றவாளி’ என்று மாஜிஸ்திரேட்டு அறிவித்தார். 15-ந் தேதி, அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

dinasuvadu.com 

Dinasuvadu desk

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

1 hour ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

6 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

6 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

6 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

7 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

7 hours ago