தி.மு.க. ,காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக நீரைப் பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் காவிரி நீரை உரிய முறையில் பெற்று மேட்டூர் அணையில் தேக்கி வைத்ததால் மட்டுமே 2001, 2011 ஆகிய ஆண்டுகளில் குறித்த காலத்தில் மேட்டூர் அணையை திறந்து விட முடிந்தது என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதை வசதியாக மறந்து விட்டதாகவும் துரைமுருகன் குறை கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்படும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் 113 நாட்களாக காவிரி நீரைப் பெறாமல், மேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறக்க முடியாது என்று முதலமைச்சர் கூறுவது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற மத்திய அரசுக்கு முதலமைச்சர் தேவையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி தற்போது துபாய் ஐ 103.8 என்ற தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…
சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…
சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…
சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…
சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…