முதல்வன் 2 படத்தில் கதைக்கு நடிகர் விஜய்தான் வேண்டும் என்று கதை கட்டாயப்படுத்தினால் அவரை நடிக்க வைப்பேன் என்று இயக்குநர் ஷங்கர் அதிரடியாக கூறியுள்ளார்.
இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் முதல்வன் படம் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் முகத்திரையை சுக்குநூறாக கிளித்தெடுத்தது. கருப்பு பணத்தை பற்றி அன்றே தன் படத்தில் காண்பித்திருந்தார் ஷங்கர். படம் தமிழக முழுவதும் பெரிதும் பேசப்பட்டது.அதில் நடிகர் அர்ஜூன் மற்றும் ரகுவரன் நடிப்பு மிக அருமையாக இருந்தது என்றே சொல்லலாம் அன்று அவர் காண்பித்த நேரடி விவாதம் இன்று நடக்கும் விவாதங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.ஒரு நாள் முதல்வராக வந்த முதல்வன் படத்தை எடுத்து கலக்கியவர் இயக்குநர் ஷங்கர்.
இந்நிலையில் தனியார் இணையதளம் ஒன்றிக்கு போட்டியளித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.அதில் முதல்வன் 2 படம் பற்றிய பேச்சும் அடிபட்டது.அதில் ஒரு சுவாரஸ்சியமான தகவலும் வெளியாகியுள்ளது.
தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகி ரீலிசுக்கு தயார் நிலையில் உள்ள 2.0 படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் இந்தியன் 2 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த பேட்டியில் அவரிடம் நடிகர் விஜய் தற்போது அரசியல் படங்களில் நடித்து வருகிறார். ஆகையால் அவரை ஹீரோவாக வைத்து முதல்வன் 2 படத்தை இயக்குவீர்களா என்ற கேள்வி முன் வைத்தார்கள் அதற்கு பதிலளித்த இயக்குநர் ஷங்கர் முதல்வன் 2 படத்தின் கதைக்கு நடிகர் விஜய்தான் வேண்டும் என்று என்னை கதை நிர்பந்தித்தால் நான் அவரை கண்டிப்பாக நடிக்க வைப்பேன் என்று கூறியுள்ளார். இந்த தகவல் கோலிவூட் வட்டாரத்தை வலம் வந்து கொண்டிருக்குறது.மேலும் இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்டாக உள்ளதாம்.
DINASUVADU