மாட்டுத்தீவன வழக்கு-லாலுக்கு மூன்றரை ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால்சிங் தீர்ப்பு வழங்கியுள்ளார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 6 பேருக்கும் மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பீகாரில் முதல்வராக இருந்த ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 1990 முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மாட்டுத் தீவனம் வாங்கியதாக கூறி தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சத்தை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் லாலு பிரசாத் உள்பட 16 பேரை குற்றவாளிகளாக அறிவித்து நீதிபதி சிவபால் சிங் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 3ம் தேதி லாலு உள்ளிட்டோருக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. நேற்றும் தண்டணை அறிவிப்பை தள்ளிவைத்திருந்த நீதிபதி, இன்று லாலுவிற்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனையையும், 5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment