குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சியாளர்கள்,ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் திட்டம், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ்., ஆக முடியும் என்ற சூழலை உருவாக்கிவிடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் அலுவலகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு முடிந்த பின்னர் அளிக்கப்படும் 100 நாள் பயிற்சியில், மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதன் பின்னர் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கலாம் என விரும்புவதாகக் கூறியுள்ளது. இதற்கு 7 நாட்களுக்குள் கருத்துக்களையும், தகவல்களையும் வழங்குமாறு கடந்த 17-ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் ஐ ஏ எஸ் பயிற்சி அகாடமியைச் சேர்ந்த சங்கர், கருத்து தெரிவித்துள்ளார். அதில், உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் நடத்தப்படும் 100 நாள் பயிற்சி முகாமில் அங்குள்ள அதிகாரிகளே இறுதி மதிப்பெண் வழங்கும் அதிகாரம் பெற்றவர்களாக உருவெடுப்பர் என சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தங்கள் மாநிலத்தவர்களுக்கோ, பணம் அல்லது அரசியல்வாதிகளின் தொடர்பு உள்ளவருக்கோ, தங்களுக்கு வேண்டியவர்களுக்கே முக்கியத்துவம் அளித்து அதிக மதிப்பெண் வழங்க வாய்ப்பு உருவாகிவிடும் எனக் கூறியுள்ளார்.
உதாரணமாக எழுத்து தேர்வில் சுமார் 1200 மதிப்பெண் பெற்று முதல் இடத்தில் உள்ள ஒருவரை 100நாள் பயிற்சி முகாமில் குறைந்த மதிப்பெண் வழங்கி அவரை கடைசி இடத்திற்கும், எழுத்து தேர்வில் 900 மதிப்பெண் பெற்று கடைசி இடத்தில் உள்ளவரை பயிற்சி முகாமில் அதிக மதிப்பெண்கள் வழங்கி அவரை முதல் இடத்திற்கும் கொண்டுவர அதிகாரிகளால் முடியும் என சங்கர் போன்ற கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நாட்டிலேயே ஓரளவு நேர்மையாக நடத்தப்படும் தேர்வாக யூபிஎஸ்சி தேர்வுகள் பார்க்கப்படுவம் நிலையில், திறமைக்கு மதிப்பு அளிக்காமல் பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு உடையவர்களுக்கு உதவும் வகையில் தேர்வு முறை அமைந்து விடாமல், உரிய கருத்தை மாநில அரசுகள் பொறுப்புடன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…