போதிய மீட்புகுழுக்களை உள்துறையிடம் கேட்ட பொன்னார்

ஓகி புயல் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தென் மாவட்டங்களில் போதிய அளவில் மீட்புகுழுக்களை அனுப்பிவைக்குமாறு மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜுவிடம் கூறினார். மேலும் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பற்றியும் விளக்கினார்.

இந்நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் மழையால் நாகர்கோயிலில் நம்பியார் பாலம் இடிந்து விழுந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment