புதுக்கோட்டையில்  பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது எப்படி ? என்று செயல்  விளக்கம்……

 புதுக்கோட்டையில் உள்ள  அறந்தாங்கியில்  பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது எப்படி ? என்று செயல்  விளக்கம் நடைபெற்றது .

 
கட்டுமாவடியில் வருவாய்த்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புயல், சுனாமி, பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் எவ்வாறு விழிப்புணர்வோடு செயல்பட்டு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, காவல்துறை அதிகரிகளோடு, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.
source: dinasuvadu.com

Leave a Comment