காலி பணியிடங்கள் அறிவிப்பு!தமிழக அரசு 6140 காவலர் பணிகள் காலி….

 
பணியிடங்கள்!
1. காவல்துறை – இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை)
மொத்த இடங்கள்:
5538 இடங்கள். ஆண்கள் (பொது)-3877, பெண்கள்-1661.
2. சிறைத்துறை – இரண்டாம் நிலை சிறைக்காவலர்
மொத்த இடங்கள்:
365 இடங்கள். ஆண்கள்-319, பெண்கள்-46.
3. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
மொத்த இடங்கள்:
237 இடங்கள். ஆண்கள்-237.
வயது வரம்பு:
1.7.2017 தேதிப்படி 18 முதல் 24க்குள். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினருக்கு 2 வருடங்களும், எஸ்சி, எஸ்டி, அருந்ததியர் பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஆதரவற்ற விதவைகள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
தமிழை ஒரு பாடமாகக் கொண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பணியில் சேர்ந்த 2 வருடங்களில் தமிழ்நடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ்த் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு மற்றும் சான்றிதது் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு கட்டணம்:
ரூ.130. இதை ஆன்லைன் முறையிலோ அல்லது e.payment முறையிலா செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் வி்ண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.1.2018
கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 31.1.2018
தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறைகளில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய 6140 பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
source: dinasuvadu.com

Leave a Comment