பிப்ரவரி 1ம் தேதி முதல் திமுகவினரின் ஆய்வு கூட்டம்

 
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன், பிப்ரவரி 1 முதல் மார்ச் 22 வரை மாவட்ட வாரியாக ஸ்டாலின் 50 நாட்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ” கட்சி பணிகளை செம்மைப்படுத்த அண்ணா அறிவாலயத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஊராட்சி செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றும், “உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1 முதல் மார்ச் 22 வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளனர்” என்றும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment