பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சுர்சித் பால்லா ராஜினாமா செய்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் தற்போது ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசு தொடர்ந்து மோதல் போக்குடன் இருப்பதால் தற்போது இவர் ராஜினாமா செய்துள்ளார் . மத்திய அரசு இதுபோன்ற அடாவடி நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அற்புதமாக செயல்பட்டு வந்த ரகுராம் ராஜனை நீக்கிவிட்டு புதிதாக இவரை நியமித்தது. இவரையும் மத்திய அரசு அடாவடியாக கையாண்டதால் தற்போது அவர் இந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர்
சுர்சித் பால்லா இன்று தீடிர் ராஜினாமா செய்துள்ளார்.
நேற்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் , இன்று பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர் ராஜினாமா செய்தது இந்திய அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.